★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Thursday, September 20, 2012

ஆவியை அருளுமே, சுவாமீ

ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே!

1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை

2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,
தேவ சமாதானம், நற்குணம், தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை

3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை


View All Songs

No comments:

Post a Comment