★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Friday, October 5, 2012

ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள் - 1


வேதம் சொல்லுகிறது
     நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள். - Zecha 8:16  

இன்றைய வேத வசனம்
       இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான். - சங் 112:5

இன்றைய நீதிமொழி
         வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. - நீதி 4:24 

இன்றைய கட்டளை
   எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.- 2 தீமோ 3:2-5
இன்றைய வேத தியானம்
ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள் - 1
          ஏழு முத்திரை நியாயத்தீர்ப்புகளுக்கு பிறகு இந்த ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள் நடைபெற உள்ளன. அவற்றை கீழ்க்கண்டவாறு காணலாம்.

          முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

         இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது; அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.

        மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின் மேலும், நீரூற்றுகளின் மேலும் விழுந்தது. அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.

           நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று. - (வெளிப்படுத்தின விசேஷம் 8:7-12).  இந்த நான்கு எக்காள நியாயத்தீர்ப்புகளிலும் மூன்றிலொரு பங்கு சேதமாகிறது என்றுப் பார்க்கிறோம்.

            பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்து வரக்கண்டேன்: அவன் மகா சத்தமிட்டு; இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன் (வெளி 8:13).மேற்கண்ட இந்த வசனத்தில்
ஐயோ என்று மூன்று முறை வருவதை கவனியுங்கள். அதிலிருந்து வரப்போகிற மூன்று எக்காள சத்தங்களினால் பயங்கரமான உபத்திரவங்களும் ஆபத்துகளும் வரப் போகிறது என்று அர்த்தமாகும்.

               ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது. அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது. பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களைக் கொலைசெய்யும் படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும். அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம். அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன. அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன. இரும்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன. அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன. அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் (Abaddon) என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் (Apollyon) என்றும் அவனுக்குப் பெயர்.
- (வெளி 9:1-11)

           இந்த வசனங்களின்படி, பாதாளக்குழி திறக்கப்பட்டு, வெட்டுக்கிளிகள் புறப்பட்டு வந்து, தேவனுடைய முத்திரையை தரித்திராத மக்களை, கொட்டும்படி அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்படுகிறது. அதுவும் ஐந்து மாதத்திற்கு தொடர்ந்து அந்த வேதனை இருக்கும். அது எவ்வளவு பயங்கரமான ஒரு நிலைமையாய் இருக்கும்! அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும். மனிதர் சாக வேண்டும் என்று சாவைத்தேடி ஓடினாலும், சாவு அவர்களை விட்டு ஓடிப் போம். இந்த வெட்டுகிளிகளுக்கு தலைவனாக அப்பொல்லியோன் காணப்படுகிறான். அப்பொல்லியோன் என்பதற்கு அழிக்கிறவன் என்று அர்த்தமாகும். முதலாம் ஆபத்து ஐந்துமாதங்கள் கழித்து முடிந்துப்போகும். இதோ, இரண்டாம் ஆபத்து வருகிறது:

         ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐபிராத்தென்னும் (Euphrates) பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன். குதிரைகளையும் அவைகளின் மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினி நிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன. அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள். அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது. அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை; தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும்விட்டு மனந்திரும்பவுமில்லை. - (வெளி 9:13-21)

            இந்த ஆபத்து இரண்டாவது ஐயோ என்று கூறப்படுகிறது. இந்த நியாயத்தீர்ப்பில் ஐபிராத்து நதியண்டையில் கட்டப்பட்டிருந்த நான்கு தூதர்களும் கட்டவிழ்க்கப்பட்டு, இருபது கோடியாயிருக்கிற குதிரை சேனைகளை தலைமை தாங்கி மனுஷரில் மூன்றிலொரு பங்கை கொன்றார்கள். நான்காம் முத்திரையாகிய நியாயத்தீர்ப்பில் பூமியில் கால்பங்கு மனிதர் கொல்லப்படடதை கடந்த நாட்களில் படித்தோம். இப்போது மூன்றிலொரு பங்கு கொல்லப்படும்போது 58சதவீத மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனாலும் மீதியாயிருந்த மக்கள் மனந்திரும்பவில்லை என்று பார்க்கிறோம். இன்னும் அவர்களின் மனம் கடினப்பட்டுப் போய் தேவனை நோக்கி பார்க்க மறுத்து, இன்னும் வர இருக்கும்; நியாயத்தீர்ப்புகளை எதிர்கொள்வார்கள். 

         ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின. அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர். ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள். - (வெளி 11:15-18)

          இந்த கடைசி எக்காள நியாயத்தீர்ப்பு உண்மையில் ஒரு நியாயத்தீர்ப்பாக இல்லாவிட்டாலும், பரலோகத்தில் கெம்பீர சத்தங்கள் உண்டாயின என்று பார்க்கிறோம். பரலோகத்தில் சந்தோஷமான சத்தம் உண்டாகிறது. ஏனென்றால் முடிவு நெருங்கி விட்டது என்பதாலும், தேவன் தம்மேல் பயபக்தியாயிருந்தவர்களுக்கு பலனளிக்க காலம் வந்தது என்றும் களிகூர்ந்தார்கள். இந்த ஏழு எக்காள நியாய தீர்ப்புகள் நடந்துக் கொண்டிருக்கும்போதே உலகத்தில் வேறு சில காரியங்களும் நடக்கின்றன. அவற்றைக் குறித்து நாளைய தினம் காண்போம்.

ஜெபம்:
         எங்களை நேசிக்கிற எங்கள் நல்ல தகப்பனே, இன்னும் ஒரு புதிய நாளை நாங்கள் காணும்படி எங்களுக்கு ஜீவனையும் சுகத்தையும் தந்தீரே உமக்கு நன்றி. இந்த மாதம் முழுவதையும் எங்களுக்கு ஆசீர்வாதமாக தந்தருளும். கடைசி காலங்களில் நடைபெற இருக்கும் காரியங்களைக் குறித்து எங்களுக்கு கிருபையாய் வெளிப்படுத்தி இருக்கிறீரே உமக்கு ஸ்தோத்திரம். காலங்களையும் அடையாளங்களையும் கண்டு நாங்கள், உம்முடைய வருகைக்கு ஆயத்தப்பட உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
 
      

No comments:

Post a Comment